கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இடங்கள் வழங்கிய உரிமையாளர்களுக்கு ஆணைகள் வழங்கிய அமைச்சர்கள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் வட்டம் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு இடங்கள் வழங்கிய உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ஆணைகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் மற்றும் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, அரசுத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக