கூந்தங்குழி - 5 லட்சம் மதிப்பில் "மீன்பிடி ஏலக்கூடம்" - ஏ ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஏப்ரல், 2025

கூந்தங்குழி - 5 லட்சம் மதிப்பில் "மீன்பிடி ஏலக்கூடம்" - ஏ ஆர் ரஹ்மானுக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாவட்டம், கூத்தன்குளி மீனவ கிராமத்தில் சுமார் 4000 மீனவ குடும்பங்கள் சுமார் 250 நாட்டுப்படகுகளில் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றனர். 

இம்மீனவ மக்கள் தாங்கள் பிடித்து வரும் கடல்மீன்களை வெயிலிலும் மழையிலும் காத்துகிடந்து விற்பனை செய்து வந்தனர்.

மீனவ மக்களின் இத்துயரை போக்கும் வண்ணம் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி மு க வர்த்தக அணி அமைப்பாளர் "நெல்லை ஏ. ஆர். ரஹ்மான் "  தங்கள் சொந்த செலவில் 5லட்சம் மதிப்பில் "மீன்பிடி ஏலக்கூடம்" அமைத்து கொடுத்தார்.

இத்தகைய பொதுநலன் சேவையை கூத்தன்குளி பொதுமக்கள் சார்பாக ராதாபுரம் ஏ ஆர் ரஹ்மானுக்கு கூத்தன்குழி பொதுமக்கள் சார்பாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad