கன்னியாகுமரி மாவட்டத்தில் 150 கிராம் கஞ்சா பறிமுதல்... நான்கு பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 6 மே, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் 150 கிராம் கஞ்சா பறிமுதல்... நான்கு பேர் கைது.

150 கிராம் கஞ்சா பறிமுதல்... நான்கு பேர் கைது.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக கோட்டர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் 150 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர்.இதுவரை இடலாகுடி பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரின் மகன் சர்மா(20), பறக்கை விலக்கு பகுதியை சேர்ந்த அனில்குமார் என்பவரின் மகன் சதீஷ் (32), சுசீந்திரம் பகுதியை சேர்த்த சுந்தரம்பிள்ளை என்பவரின் மகன் ஹரிஹரன்(24) , வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த சூரிய ராஜன் என்பவரின் மகன் ஜெபின்(22) ஆகிய நான்கு பேர் கைது 
செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் போதை பாதையை தவிர்த்து வெற்றி பாதையில் பயணித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தினார். 

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad