அகர்வால் சாரி டபிள் டிரஸ்ட், வணிகர் சங்கம் சார்பில் திருச்செந்தூரில் 60 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வணிகர் சங்க மாநில தலைவர் காமராஜ், நிர்வாகிகள் வழங்கினர்.
திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சென்னை அகர்வால் சாரி டபிள் டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கம் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச செயற்கை கைகள் மற்றும் கால்கள் அளவெடுக்கும் முகாம் கடந்த மாதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 60 பயனாளிகளுக்கும் இன்று திருச்செந்தூர் ராஜ் திருமண மஹாலில் வைத்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான செயற்கை கைகள் மற்றும் கால்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் டிசிடபிள்யூ மேலாளர் திரு சீனிவாசன் தலைமை தாங்கினார். டாக்டர் ராக் கேஷ் பர்ன்ண்டோ , தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராஜ்நாடார் முன்னிலை வகித்தனர். அகர்வால் டிரெஸ்ட் நிர்வாகிகள் சம்பத், சுபாஷ், ஜான் வில்லியம்ஸ் ,
இஞ்சினியர் நாராயணன்,வணிகர் சங்கத்தின் மண்டல தலைவர் விஎம் வேலாயுத பெருமாள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நஷீர் , பார்த்தீபன் , கணேசன் அவர்கள் வணிகர் சங்கத்தின் மாநில துணை தலைவர் டாக்டர் சுரேஷ் , முத்துக்குமார் , பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக