சொத்துக்காக 70 வயது மூதாட்டியின் இரண்டு கைகளையும் அடித்து உடைத்த பேரன்- எனது அம்மாவை கருணை கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை மகள் குமுறல்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லான் என்ற நல்லுசாமி இவரது மனைவி ஆதம்மாள்(70) இவர்களுக்கு மூன்று (மகாலட்சுமி, கனகா, கற்பகம்) மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
ஆதம்மாளுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும், ஒரு வீடும் உள்ளது. இந்த நிலையில் மகன் முத்தையா இரண்டாவது திருமணம் முடித்து சென்னையில் வசித்து வருகிறார். அவரின் மூத்த மனைவி வசந்தி அவரது மகன் அரவிந்த் (28) அவ்வப்போது தங்களுக்கு சொத்தை பிரித்து தருமாறு ஆதாம்மாளிடம் வீட்டிற்கு சென்று மிரட்டுவது, மின்சாரத்தை துண்டிப்பது போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆதாம்மாள் திருமங்கலம் நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, வழக்கு உள்ள நிலையில் நேற்று அரவிந்த் என்பவர் 70 வயது மூதாட்டியான தனது பாட்டி ஆதாம்மாவின் வீட்டுக்கு போய் சொத்தை பிரித்து தரக் கூறி, தகராறில் ஈடுபட்டு கட்டையால் மூதாட்டியை தாக்க வந்த போது மூதாட்டி கைகளை நீட்டி உள்ளார். அப்போது அரவிந்த் மூதாட்டியின் இரண்டு கைகளையும் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து சென்று உள்ளார்.
ஆனால் ஆதம்மாள் , தனது மகன் முத்தையாவின் திருமணத்திற்காக ரூபாய் 1.5 லட்சம் ரொக்க பணமும், 15 சவரன் தங்க நகையும் அளித்துள்ளார். அதனை திருப்பித் தருமாறு ஆதம்மாள் கேட்டபோது, கோபம் அடைந்த அரவிந்த், தனது பாட்டி அரவிந்தை கட்டை , கம்பியால் சரமாரியாக தாக்கி காயப்படுத்தியதுடன்,வீட்டை விட்டு செல்லாவிட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் எனவும், கொலை மிரட்டல் விடுத்து தாக்கியதாக ஆதம்மாள் கண்ணீருடன் தெரிவித்தார்.
தற்போது ஆதம்மாள், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சொத்துக்காக தனது இரண்டு கைகளையும் அடித்து உடைத்து விட்டார்கள், என்னால் வலி தாங்க முடியல, வாழ முடியவில்லை இதுகுறித்து எஸ் பி அலுவலகத்தில், மகளிர் காவல் நிலையத்தில், நாகையாபுரம் காவல் நிலையத்தில் என ஐந்து முறை புகார் அளித்தும் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவேதனையுடன் தெரிவித்தார் ஆதம்மாள்.
எனது அம்மா வழி தாங்க முடியாமல் இருப்பதாலும் , எங்களால் அவர்களை ஆறுதல் கூறவும் ,கவனிக்க முடியாத நிலை உள்ளதால் ,தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கருணை கொலை செய்வதை தவிர வே று வழியில்லை என மகள் மகாலட்சுமி வேதனையுடன் தெரிவித்தனர்.
சொத்துக்காக பேரனே பாட்டியின் இரண்டு கைகளை அடித்து உடைத்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக