தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் அப்ரண்டீஸ் டிரேட் யூனியன் தொழிற்சங்க கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் அப்ரண்டீஸ் டிரேட் யூனியன் தொழிற்சங்க கோரிக்கை.


தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர் காலி பணியிடங்கள் மட்டும்  38970 உள்ளது, இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆள்  பற்றாக்குறையை சமாளிக்க ஒவ்வொரு ஆண்டும் ஐடிஐ டிப்ளமோ BE முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் மின்சார வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி வழங்கி வருகின்றது,


அப்ரண்டீஸ் பயிற்சி காலம் ஒரு வருடம் முடிந்த பிறகு  அப்ரண்டீஸ் பயிற்சியாளர்களை வெளியே எடுத்து விடுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம். சுமார் 5,000 ஆயிரம் குடும்பங்கள் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்,


தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு அப்ரண்டடீஸ் டடிரேடு யூனியன் (TNEBATU) மாநில பொதுச்செயலாளர் திரு. பா. நந்தகுமார் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து அப்ரண்டீஸ் தொழிற்சங்க கோரிக்கைகளை முன்வைத்து மனு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில் மீண்டும் அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad