காட்பாடி , மே 2 -
வேலூர் மாவட்டம் பள்ளி மாணவமாணவி களுக்கு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்பாடியில் உள்ள
முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபாடி போட்டி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது
மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநில தலைவர், D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி னார். நிகழ்ச்சியில் மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜ், ஒன்றியக்குழு தலைவர் வே.வேல் முருகன் மாவட்ட விளையாட்டு மேம் பாட்டு அணி தலைவர் பூஞ்சோலை ஸ்ரீனிவாசன், கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக