இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.கஅவசர செயற்குழு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.கஅவசர செயற்குழு கூட்டம்!

இராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க
அவசர செயற்குழு கூட்டம்!
இராணிப்பேட்டை , மே 8 -

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயற் குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் 
ஏ.கே. சுந்தரமூர்த்தி  தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப் பேட்டை‌ மாவட்ட கழக‌‌ செயலாளர் 
இராணிப்பேட்டை‌ ஆர். காந்தி அவர்கள்
"நாடு போற்றும் நான்காண்டு""தொடர ட்டும் பல்லாண்டு "கழக பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும் மற்றும் 
ஜீன் 1 அன்று பொதுக்குழு கூட்டம் 
மதுரையில் நடைபெறுகிறது எனவே இதில் அனைவரும் கலந்து கொள்ள‌ வேண்டும் என ஆலோசனை வழங்கி 
சிறப்புரையாற்றினார் .இதில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வ ரப்பன் மாவட்ட துணைச் செயலாளர்கள்
துரை மஸ்தான், குமுதா குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்மு.கண்ணையன், 
க.சுந்தரம், அ.அசோகன், கலைமணி, 
மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றியுரை மாவட்ட துணை செயலாளர் மு.சிவானந்தம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad