வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம்!
ராணிப்பேட்டை , மே 23 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தனியார் மண்டபத்தில் திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
வாலாஜாவில் தனியார் திருமண மண்ட பத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் திருச்சியில் வக்பு திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மதச்சார்பின்மை பாதுகாப்பு மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி, வாலாஜா நகரம் , வாலாஜா கிழக்கு ஒன்றியம், அம்மூர் பேரூராட்சி செயற்குழு கூட்டம் நகர செயலாளர் மேஷாக் மூர்த்தி தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப் பேட்டை மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் கர்ணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் சசிகுமார், மாந்தங்கல் ராஜா, தியாகராஜன், ஜெயவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் சிவா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக