ஏலகிரி மலையில் எ.ஆர். தங்கக் கோட்டை சார்பாக முதலாம் ஆண்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
திருப்பத்தூர் , ஏப் 30 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதன் காரணமாக ஏலகிரி மலை படகு இல்லம் மற்றும் பூங்கா எதிரில் முதலாம் ஆண்டு நீர் மோர் பந்தலை ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜாஸ்ரீ கிரி வேலன் மற்றும் எ.ஆர். தங்க கோட்டை பொது மேலாளர் சசிகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் மேலும் இதில் எ.ஆர். தங்க கோட்டை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக