மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி மற்றும் இருவர் படுகாயம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி மற்றும் இருவர் படுகாயம்

 


மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி மற்றும் இருவர் படுகாயம். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையங்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (வயது 65) இவரது மகன் வயிற்று பேரன் வீரமணி (வயது 10) மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் வெங்கட்டி (வயது55) என்பவர் இரவு ஏழு மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர் மாலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டதால்  வீட்டின் வாசலில் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.


அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் வலையன் குளம்.அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கட்டம்மா சிகிச்சை பலனின்றி இறந்தார்.


மேலும் படுகாயம் அடைந்த அம்மா பிள்ளை வீரமணி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


வலையங்குளம் பகுதியில் மழையினால் சுவர் இடிந்து பெண் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad