விஎஸ் வீரபத்திர முதலியார் பூங்காவில் மரக்கன்றுகள் வைத்த சேர்மன் மற்றும் கமிஷனர் !
திருப்பத்தூர், மே 13 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் விஎஸ் வீரபத்திர முதலியார் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பல மரங்கள் இருந்த போதிலும் இங்கு செடிகள் வைப்பதற்கு பல இடங்கள் இருந்ததால் அதனை சீர்படுத்தி இங்கே செடி வைக்கப்பட்டன இதனால் செடிகள் வைத்து தினந்தோறும் இதனை பராமரிக் கப்படும் எனவும் தெரிவித்தார்கள்மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப் பாளர் வெங்கடேசன் திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா மற்றும் திருப்பத்தூர் நகராட்சி கமிஷனர் சாந்தி ஆகியோர் 50 மரக்கன்றுகளை வைத்தனர். மேலும் இந்த பூங்காவை பூரண அமைக்க 17 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது. விளையாட்டு உபகரணங்கள் போன்றவை இதில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்கள் அன்றாட பொதுமக்கள் இங்கு வந்து விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அதற்கான பணியை ஒரு சில நாட்களில் துவங்கப்படுவ தாகவும் நகராட்சி கமிஷனர் சாந்தி தெரிவித்தார். இந்த நிகழ்வில் நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக