உதகையில் இருசக்கரம் வாகனம் ஒரு நபர் நடந்து சென்றவர் மீது மோதல்:
உதகை லோயர் பஜார் பகுதியில் அமைந்திருக்கும் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் சாலையை கடந்து கொண்டிருந்த நபர் மீது மோதியதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஏ டி எஸ் பி மணிகண்டன் அவர்கள் அவர் வாகனத்தை நிறுத்தி உடனடியாக காயப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்தை பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஏ டி எஸ் பி மணிகண்டன் அவர்களின் மனிதாபிமானமிக்க செயலை கண்டு பொதுமக்கள் அவரே பாராட்டி நன்றி தெரிவித்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக