தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சி சந்திரபுரம்
கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் கொடி அசைத்து துவக்கம்!
திருப்பத்தூர் , மே 28 -
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,சந்திரபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சி யை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரு மான க.தேவராஜி MLA சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம்.சிங்காரவேலன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, மாணவரணி புகழேந்தி, தகவல் தொழில்நுட்ப அணிஒருங்கிணைப்பாளர் அரசு மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர் அண்ணாமலை மோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக