காணாமல் போன விவசாயி ஏலகிரி ஏரியில் பிணமாக மீட்பு! போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் ,மே 24 -
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியை சேர்ந்த பூபதி (வயது 60) கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனார் இந்நிலையில் இன்று( மே 24) ஏலகிரி கிராமத்தில் உள்ள ஏரியில் பிணமாக மிதந்து கிடந்தார் இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக் காக திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் காணாமல் போனவர் கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக