தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் 28 சுற்றுலா பயணிகள் படுகொலையை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று 05-05-25 காலை 10 மணி அளவில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய தலைவர்கள் கிளை தலைவர்கள் கிளை நிர்வாகிகள் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக