செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை முதல்வர் நேரில் அழைத்து வாழ்த்து!
திருப்பத்தூர் ,மே 8 -
தமிழகத்தில் நடந்து முடிந்த 12 வகுப்பு தேர்வு முடிவு தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு வியாழக்கிழமை இன்று காலை வெளியானது
திருப்பத்தூர் மாவட்டம் பொறுத் தவரை யில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர் மேலும் மாநிலத்தைப் பொறுத்தவரையில் 27 வது இடம் பெற்று ள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷ மங்கலம் பகுதியில் உள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த சித்தேரி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஷோபனா பிளஸ் டூ தேர்வில் 578 மதிப்பெண் எடுத்துசாதனை படைத்துள்ளார்.அவரை பள்ளியின் சார் பில் நேரில் அழைத்து பள்ளியின் முதல் வர் கௌதம் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல அதே பள்ளி யில் குரும்பேரி பகுதியைச் சேர்ந்த வேடி யப்பன் மகள் பிரியதர்ஷினி 567 மதிப் பெண் எடுத்த இரண்டாவது இடத்திலும்
அங்கவலசை பகுதியைச் சேர்ந்த ஆறு முகம் மகள் ஐஸ்வர்யா 532 மதிப் பெண் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இதனால் பள்ளியின் நிர்வாகத்தின் சார்பில் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக் கள் தெரிவிக்கப்பட்டது.மேலும் மதிப் பெண் எடுத்த மாணவிகள் நீட் தேர்வு எழுதி உள்ளோம் அதில் வெற்றி பெற்று மருத்துவராகும் கனவு உள்ளது அதனை நினைவாக்குவோம் எனவும் கூறினர்.
கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் 32 வது இடத்தில் இருந்து தற்போது 27-வது இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக