ஓட்டப்பிடாரம் - உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

ஓட்டப்பிடாரம் - உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டம்



ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள்,சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் களஆய்வு மேற்கொண்டார்


தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும்சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டு மென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், 21.05.2025 மற்றும் 22.05.2025 ஆகிய இரண்டு தினங்கள் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார்.

அதன்படிநேற்றைய தினம் காலை முதல் ஓட்டப்பிடாரம்வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்துகள ஆய்வு மேற்கொண்டுபிற்பகலில் மாவட்ட நிலையிலான அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாலையில் ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுமகப்பேறுப் பிரிவுபுற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்துஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குஆவரங்காடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பினை ரூ.4 இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்புப்பணிகளையும்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ரூ.16.45 இலட்சம் செலவில் கட்டப்பட்டுவரும்அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர்இன்று (22.05.2025காலையில் ஓட்டப்பிடாரம்வட்டத்திற்குட்பட்ட பட்டிணமருதூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதொல் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டுதொல்லியல் அகழாய்வு நடைபெறவுள்ள இடத்தினையும்பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்தொடர்ந்துபட்டிணமருதூர்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் குளோரின் சரியான அளவில் உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத்இ.ஆ.ப.அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துகுடிநீர் சீராக வழங்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போதுகோவில்பட்டி வருவாய்கோட்டாட்சியர் திருமதி க.மகாலட்சுமிஇணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மரு.க.பிரியதர்ஷினிஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் திரு.ஆனந்த்வட்டார வளர்ச்சி அலுவலர்கள்மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad