தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூர் கிளையின் சார்பாக "சமுதாய விழிப்புணர்வு மற்றும் மார்க்க திறனாய்வு கேள்வி பதில் பரிசளிப்பு" நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூர் கிளையின் சார்பாக "சமுதாய விழிப்புணர்வு மற்றும் மார்க்க திறனாய்வு கேள்வி பதில் பரிசளிப்பு" நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம், சிறுத்தொண்டநல்லூர் கிளையின் சார்பாக "சமுதாய விழிப்புணர்வு மற்றும் மார்க்க திறனாய்வு கேள்வி பதில் பரிசளிப்பு" நிகழ்ச்சி சிறுத்தொண்டநல்லூரில் வைத்து நடைபெற்றது.

சிறுத்தொண்டநல்லூர் கிளையின் செயலாளர் சாகுல் அவர்கள் துவக்க உரையாற்றினார். "எங்கள் வக்பு எங்கள் உரிமை" என்ற தலைப்பில் சகோ. J.முஹம்மது ஜுபைர் (MISC), "பெற்றோர்களே உங்களைத்தான்"என்ற தலைப்பில் சகோ. T.ஸைஃபுல்லாஹ் சிறப்புரை ஆற்றினார்கள். 

நிகழ்ச்சியில் "மார்க்க திறனாய்வு கேள்வி பதில் நிகழ்ச்சி"யில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மக்தப் மதரஸா மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

கிளையின் தலைவர் பாரூக், செயலாளர் சாகுல், பொருளாளர் முஹம்மது அசார் மற்றும் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர். இறுதியாக கிளையின் பொருளாளர் முஹம்மது அசார் நன்றியுரை ஆற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad