தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கான காலக்கெடு நிறைவு : - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கான காலக்கெடு நிறைவு :




ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். இதில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தெளிவாக தெரியும்படி எழுதப்பட்டிருக்க வேண்டும்.


அதன்பிறகு, அவரவர் விரும்பும்

மொழிகளில் பெயர் பலகை

அமைக்கலாம். எனவே கடைகள்,

உணவு நிறுவனங்கள்,

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்,

தொழிற்சாலைகள் உள்ளிட்ட

இடங்களில் தமிழில் பெயர்

பலகை வைப்பதை 100 சதவீதம்

உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு, வணிக சங்கங்களைச்

சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு

அளிக்க வேண்டும். தமிழில் பெயர்

பலகை வைக்கப்படவில்லை

என்றால் அபராதம் விதிக்கப்படும்

என்று தொழிலாளர் நலத்துறை

அறிவுறுத்தியிருந்தது.


மேலும், தமிழில் பெயர் பலகை வைப்பதற்கான கால அவகாசம் மே 15ம் தேதி வரை அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால அவகாசம் நேற்றுடன் முடிவு பெற்றது. இதனையடுத்து, ஈரோடு மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட உள்ளனர். அப்போது, தமிழில் விளம்பர பலகை இல்லையென்றால், சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad