திருமங்கலம் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செம்மொழி நாயகர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மறைந்த முன்னாள் முதல்வர் செம்மொழி நாயகர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா அனைத்து திமுக அலுவலகத்தில் கொண்டாடினர்.
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மூ. மணிமாறன் தலைமையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மேலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 10லட்சம் ரூபாய் மதீப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தூய்மை பணியாளர்களும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முத்துராமலிங்கம் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் மதன்குமார் ராமமூர்த்தி தனபாண்டிய தங்க பாண்டியன் ஆலம்பட்டி சண்முகம், நகர் மன்ற செயலாளர் மு.சி .சோ ஸ்ரீதர் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் மற்றும் நகர் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக