நெய்வேலி அருகே சுமார்1500 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ களப்பாள வீரட்டீஸ்வரர் ஆலய மஹாகும்பாபிஷேக விழா
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ களப்பாள வீரட்டீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்து மங்கள இசையுடன் மேள தாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு பூஜைகள் செய்யபட்டு வேத மந்திரங்கள் ஒத புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை காட்டப்பட்டது,
பின்னர் புனித நீரை பொதுமக்கள் மீதும் தெளிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக