தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த வாரத்துடன் நிறைவடைந்ததால் இந்த வாரம் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ராமேஸ்வரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, காரைக்கால், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து 20 டன் கடல் மீன்கள் நேற்று (ஜூன் 22) ஈரோடு மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. வரத்து அதிகரிபபு எதிரொலியாக கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று குறைந்துள்ளது.
நேற்று மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-கடல் கொடுவா - ரூ.850, வெள்ளை வாவல் - ரூ.1,200, கருப்பு வாவல் - ரூ.900, வஞ்சரம் - ரூ.1,100, சால்மோன் - ரூ.900, முரல் - ரூ.450, மயில் - ரூ.800, கிளி - ரூ.700, சங்கரா - ரூ.400, விளமின் - ரூ.600, தேங்காய் பாறை - ரூ.600, பெரிய இறால் - ரூ.800, சின்ன இறால் - ரூ.600, ப்ளூ நண்டு -ரூ.750, அயிலை - ரூ.300, மத்தி - ரூ.300, டுயானா - ரூ.700, திருக்கை - ரூ.450, வசந்தி - ரூ.600, கனவா - ரூ.500.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக