வேலூரில் 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்!
வேலூர் , ஜூன் 6 -
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் இன்று (ஜூன்-6) திடீர் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது தடை செய்யப்பட்ட 37 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 கடைகளுக்கு தலா 500 வீதம் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக