ஈரோட்டில் பானிபூரி விற்பனை செய்வது தொடர்பாக இரு கடை கார்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,
ஈரோடு சக்தி செல்லும் சாலையில் தண்ணீர் பந்தல்பாளையம் பகுதியில் பிரபல தனியார் பல்பொருள் விற்பனை நிலையம் முன்பு பனிப்பரி உள்ளிட்ட சாலையோர கடைகள் அதிகமாக உள்ளன. இதே பகுதியில் சதீஷ்குமார் என்பவரும் பனிப்பூரி விற்பனை கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரை போன்று அருகில் பனிப்பூரி கடை நடத்தி வரும் நபருக்கும் இடையே கடந்த சில தினங்களாக வாய்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்கம் போல சதீஷ்குமார் கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள மற்றொரு பானிபூரி கடை நடத்தி வந்தவருக்கு இடையே திடீரென வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
ஒருவருக்கு ஒருவர் சாலையில்
சண்டையிட்டு கொண்டனர். இதில்
மற்றொரு கடைகாரர் சதீஷ்குமாரின்
தலையில் தாக்கியதில் அவர்
காயமடைந்தார். இந்த சம்பவத்தால்
அப்பகுதியில் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து
சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு
போலீசார் கூட்டத்தை கலைத்து
காயமடைந்த சதீஷ்குமாரை
ஈரோடு அரசு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து
வடக்கு போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக