கோவையில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் சிறப்பாக செயல்பட்ட காவலர்கள்- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!
கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டத்தில் குற்றங்களை தடுக்கும் நோக்கில் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைந்துள்ள தனிப்படை போலீசார் தினசரி இரவு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம், இன்றைய தினம் அதிகாலை நடைபெற்ற ரோந்து பணியின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர் .விசாரணையில் அவனது பெயர் இளங்கோவன் என்று அந்த நபருக்கு இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து இரண்டு வாகனங்கள் மீட்கப்பட்டன. இந்த சிறப்பான காவல் நடவடிக்கைகளை பாராட்டி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட காவல் அலுவலகத்தில் இரவு ரோந்து பணியில் சிறப்பாக ஈடுபட்ட காவலர்களை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பணியை பாராட்டினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக