குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளி கள் திருநங்கைகள் விதவைகள் ஏழைகளுக்கு நல திட்டங்கள் வழங்கு தல்!
குடியாத்தம் , ஜூன் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட் டை ராஜாஜி தெருவில் உள்ள எஸ் டி எஸ் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனா ளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு அரிசி பருப்பு, சேமியா போன்ற 90 வது மாதமாக இன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு 35 வது வார்டு அதிமுக மேலமைப்பு பிரதிநிதி கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
முன்னாள் இன்னர் வீல் சங்கத் தலைவி கீத லட்சுமி முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
27 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சிட்டிபாபு முன்னாள் நகர் மன்ற உறுப்பி னர் வி இ கருணா அவர்கள் கலந்து கொண்டு அரிசி பருப்பு சேமியா ரவை போன்ற நிவாரண பொருட்களை சுமார் 75 நபர்களுக்கு வழங்கினார்கள்
இறுதியில் ஜெயந்தி நன்றி கூறினார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக