ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக சைக்கிள் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 ஜூன், 2025

ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

 


உலக புகையிலைப் தினத்தை முன்னிட்டு கோவை பந்தயசாலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


ஆண்டுதோறும் மே மாதம் 31ஆம் தேதி உலகப் புகையிலைப் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த நாள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில், கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை சார்பாக, கோவை பந்தைய சாலை பகுதியில் ,விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை எஸ் என் ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் பந்தைய சாலை காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி ஆகியோர் கொடி யசைத்து துவக்கி இதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்கள்,ஊர்வலமாக சைக்கிளிலும், சென்றனர் .இப்பேரணியின் வாயிலாக புகையிலை பயன்பாட்டின் தீங்குகள் குறித்து முக்கிய கூறுகள் எடுத்துக் கூறப்பட்டது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad