காக்காங்கரையில் மின் இணைப்பு இல்லாமல் செயல்படும் அங்கன்வா டி மையம் !
திருப்பத்தூர் ,ஜூன்-13
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றி யற்கு உட்பட்ட காக்கங்கரை ஊராட்சியில் காக்கங்கரை நடுநிலைப்பள்ளி பின் பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நிதியில் 2021 மற்றும் 2022 நிதி ஆண்டில் ரூ. 11,97000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை கடந்த ஒரு வருடத்தில் முன்பு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்ல தம்பி அவர்கள் திறந்து வைத்தார் அவர்திறந்து வைத்து ஒரு வருட காலம் ஆகியும் இன்று வரை அதற்கு மின் இணைப்பு தராமல் காலம் தாழ்த்தி வரும் ஊராட்சி மன்ற தலைவர் மின் இணைப்பு இல்லாததால் குழந்தைகள் மதிய வேளையில் உடல் முழுவதும் வேர்வையுடன் அங்கு படுத்து உறங்குகின்றனர் இதனால் குழந்தை களுக்கு நோய் தொற்று ஏற்படும்அபாயம் உள்ளது ஆகவே இதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வ லர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக