கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக காட்டு மாடுகள் கூட்டம்கூட்டமாக தேயிலைத் தோட்டங்களில் உலவி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரி அளக்கரை முதல் அரவேணு பகுதி வரை உள்ள தேயிலைத் தோட்டங்களில் குட்டிகளுடன் காட்டு மாடுகள் கூட்டம்கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் தேயிலைத் தோட்டத்துக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள் பாதுகாப்பாக பணிபுரிய வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் நொவ்சத் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக