சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப நியமிக்கப்பட்டு அரசாணை வெளியீடு.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரித்து வந்த 9 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 55 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் தமிழ்நாடு ஊரக புத்தகத் திட்டம் மற்றும் திட்ட இயக்குனர், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றின் தலைமை இயக்க அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த திருமதி கா. பொற்கொடி இ.ஆ.ப அவர்களை சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக