கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியன சார்பில் ஐடிஐ மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம், நுகர்வோர் மைய நிர்வாகி அஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜெய்னப் பாத்திலா தலைமையிலான மருந்தாளுனர் தௌபீக், செவிலியர் சுமதி, நிர்வாக உதவியாளர்கள் லாய்ஷான் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. தேவையுள்ளவர்களுக்கு இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.
முகாமில் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மைய மாணவ மாணவிகள் பயிற்றுனர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக