சீகூர் வனச்சரகப் பகுதியில் புலி இறப்பு
முதுமலை புலிகள் காப்பகம். மசினகுடி வனக்கோட்டம். சீகூர் வன சரகம் பகுதியில். வன பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சுமார் ஒரு வயதுடைய ஆண் புலி இறந்து கிடந்தது கண்டறியபட்டது. இதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் மற்றும் பாதுகாவலர் கிருபாசங்கர். அறிவுறுத்தலின் பேரில். மசினகுடி வன கோட்ட துணை இயக்குனர் அருண்குமார் உத்தரவின் படி.NTCA. நெறிமுறையின் படி. மருத்துவக் குழு. புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என சீகூர் வனத்துறை ரேஞ்சர் தேவ்ஆனந்த் தெரிவித்தார். பைக்காரா பகுதியில் சில தின முன் ஒரு புலி இறந்த நிலையில் தற்போது சீகூர் பகுதியில் ஒரு புலி இறந்துள்ளது வன ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக