திருமங்கலம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்தும் பணி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜூன், 2025

திருமங்கலம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்தும் பணி

 திருமங்கலம் நகராட்சியில் தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்தும் பணி



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெருநாய்கள் பொதுமக்களை கடித்தும் விரட்டியும் இருக்கிறது.இதனால் வெறிநாய் கடிக்கு உயிர் பலி தமிழ்நாட்டில் ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.அதன் அடிப்படையில் நகர் மன்ற கூட்டத்தில் தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமையில் கவுன்சிலர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



நேற்று காலையில் நகராட்சி ஆணையாளர் அசோக் குமார் தலைமையில் தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது.இதில் ஒரே நாளில் 80க்கும் மேற்பட்ட நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்திருந்தனர்.உடன் சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர் ,வனஜா, கால்நடை மருத்துவர் ஜோசப், அய்யாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad