போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம் 25 லட்சம் வழங்க உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஜூலை, 2025

போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம் 25 லட்சம் வழங்க உத்தரவு.

 


போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணம் 25 லட்சம் வழங்க உத்தரவு.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவ வழக்கில் சிபிஐ சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று முழுமையான மற்றும் விலாவாரியான தீவிர விசாரணை மேற்கொண்டு, தங்களின் இறுதி கட்ட அறிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வானது தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad