வேலூர் மாவட்ட ப.க. சார்பில் சமஸ்கிரு தத்திற்கு 2533 கோடியா? தெருமுனைக் கூட்டம! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

வேலூர் மாவட்ட ப.க. சார்பில் சமஸ்கிரு தத்திற்கு 2533 கோடியா? தெருமுனைக் கூட்டம!

வேலூர் மாவட்ட ப.க. சார்பில் சமஸ்கிரு தத்திற்கு 2533 கோடியா? தெருமுனைக் கூட்டம!
குடியாத்தம் , ஜூலை 25 - 
 
 வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சமஸ்கிருதத்திற்கு மட்டும்‌ 2533 கோடி தமிழ் உள்ளிட்ட 5 தென்னாட்டு‌‌ மொழிகளுக்கு 147 கோடி மட்டுமே
யாருக்குப்‌ போகும்‌‌ நிதிR.S.S, B.J.P--யின் சூட்சுமத்தை புரிந்துக் கொள்வீர் என்ற‌ திராவிடர்கழகத்தின்தலைவர்கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்டதுண்டறிக்கை யை‌ இன்றுகுடியேற்றம் பொது மக்களிடம் வழங்கி தமிழ் மொழிக்கு எதிராக செயல் படும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து தெருமுனைக் கூட்டம் குடி யேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் மாலை 6-மணியளவில் நடத்தப் பட்டது இந்தக்  கூட்டத்திற்கு குடியேற்றம் நகர 
பகுத்தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம் தலைமையேற்றார்
பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் ஆசிரியர் பி.தனபால்வரவேற்புரையாற்றி னார்.குடியேற்றம் நகர திராவிடர் கழக 
தலைவர் சி.சாந்தகுமார் கழக புரட்சிப் பாடல்களை பாடினார் குடியேற்றம் நகர திராவிடர் கழக அமைப்பாளர் வி.மோகன் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்ச.ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்மக்கள் கவனம் பெற்ற இந்த தெருமுனைக் கூட்டத்தில் வேலூர்  மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் வி.சடகோபன்,மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மா. அழகிரிதாசன் ஆகியோர்கள் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளுக்கு 147 கோடி சொற்ப நிதி ஒதுக்கி சமஸ்கிரு தத்திற்கு மட்டும் 2,533கோடி நிதியை 
வாரி வழங்கிய ஒன்றிய அரசை கண்டி த்து கண்டன உரையாற்றினார்கள் பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பா ளர் இர.அன்பரசன் அவர்கள் இந்நிகழ் வில் ஆற்றிய சிறப்புரையில் இந்தியா வின் மொத்த மக்கள் தொகை 145 கோடி ஆகும் .இதில் 8.5 கோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள்,10.35 கோடி பேர் தெலுங்கு மொழியும்,5.69 கோடி பேர் கன்னட  மொ ழியும், 3.5கோடி பேர் மலையாளமும் பேசு கிறார்கள்.தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளுக்கு வெறும் 147 கோடி நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு,சுமார் 
24,000 பேர் மட்டுமே பேசும் சம்ஸ்கிருத மொழிக்கு 2533 கோடி  தொகை ஒதுக் கியது மக்களின் வரிப்பணத்தை வீண டிக்கும் செயலாகும் என்று தமது உரை யில் குறிப்பிட்டார்.மேலும் தந்தை பெரி யார் அவர்களின் சீரிய பரப்புரைகளான 
பெண்ணடிமை,சாதி மதமோசடிகள் பார்ப்பனர்களின் மூடநம்பிக்கை கற்பித் தல்கள் ஆகியவற்றை தகுந்த மேற்கோ ள்கள் காட்டி  பொது மக்களிடம் உரையாற் றினார் இந்நிகழ்வில் அறிவு வழி கா ணொளி  இயக்குனர் தோழர் தாமோ தரன் உட்பட நூற்றுக்கணக்கான பொது மக்கள் மற்றும் திராவிட இயக்கஉணர்வா ளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad