தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்க குடியாத்தம் வட்டக்கியின் 5ஆவது மாநாடு!
குடியாத்தம் , ஜுலை 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ மீனா ட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.செயலர் கோட்டீஸ்வரன் அறிக்கை வாசித்தார். துணைத்தலைவர் மகாலிங்கம் அனைவரையும்வரவேற்றார்
உயிர்நீத்த உறுப்பினர்களுக்கு எம்.ஆர். மணி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை ரமாநந்தினி வாசித்தார். சங்க பொருளாளர் தனபால் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார் வழக்கறிஞர் சம்பத்குமார், மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் ரவி, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பேரணாம்பட்டு, அணைக் கட்டு, கேவிகுப்பம் சங்கங்களிலிருந்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ 9000/- ஆக மாற்ற வேண்டும், 70 வயது அடைந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வூதியர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். இறுதியில் சங்க இணை செயலா ளர் திருநாவுக்கரசு நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக