ஏந்தூர் கிராமத்தில் பாலம் இல்லாததால் மூதாட்டி காயம் – பொதுமக்கள் வேதனை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஜூலை, 2025

ஏந்தூர் கிராமத்தில் பாலம் இல்லாததால் மூதாட்டி காயம் – பொதுமக்கள் வேதனை


விழுப்புரம், 
ஜூலை 25 -

ஏந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள Dr. அம்பேத்கர் தெரு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இது வள்ளுவர் தெரு செல்லும் வழியில், எதிர்புற திசையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், குறிப்பாக பெண்கள், மூதாட்டிகள் மற்றும் குழந்தைகள், அருகே ஓடும் ஓடையை கடந்து செல்லவேண்டும் என்ற இடையூறு நீண்ட காலமாக நீடிக்கின்றது.

இந்த ஓடை, ஏந்தூர் ஏரியில் இருந்து உபரிநீரை எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் நீரோட்டம் அதிகரித்து, தெருவுக்கும் பிரதான சாலைக்கும் இடையே நீர் தேங்கி நிற்பதால், மக்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.


இந்நிலையில், இன்று காலை (25.07.2025), திரு. மேரி என்ற மூதாட்டி, இந்த ஓடையை கடக்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அருகிலுள்ள பிரம்மதேசம் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுபோன்ற விபத்துகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக பலமுறை மனுக்கள் அளித்தும், இந்த ஓடையில் ஒரு சிறிய பாலம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பகுதி மக்களின் வேதனை.


பொதுமக்கள், தங்களது தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வாக இந்த ஓடையில் பாலம் அமைக்க ஒன்றிய ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


🖊 – அருள்.சி - செய்தியாளர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad