மரக்காணத்தில் கடல்குதிரைகள் வைத்திருந்தவர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

மரக்காணத்தில் கடல்குதிரைகள் வைத்திருந்தவர் கைது.


விழுப்புரம், ஜூலை 29:


மரக்காணம் அருகே கடல் வாழ் உயிரினமான கடல்குதிரைகளை இறந்த நிலையில் வைத்திருந்த நபர் ஒருவரை, திண்டிவனம் வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு, கடல்குதிரைகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையில், ஊசுட்டேரி வனப்பிரிவு வனவர் கோகுலட்சுமி, வனக்காப்பாளர்கள் இளையராஜா, மணிராவ், முத்துசீனுவாசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அந்த நேரத்தில், மரக்காணம் சாமில் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் 14 இறந்த கடல்குதிரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் மரக்காணம் கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (47) என தெரியவந்தது. வனத்துறையினர் அவரை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் கைது செய்து, திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம், அவரை நடுநிலைக் காவலில் அனுப்ப உத்தரவிட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad