திருப்பூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் கழகப் பொதுச் செயலாளர் வி. செந்தில்குமார் அவர்கள் தமிழகம் எங்கும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் அதில் அரசியல் கட்சித் தலைவர்களையும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார் மேலும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியும் வருகிறார் இதில் ஒரு பகுதியாக தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட சித்தார்பட்டியில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் & கழகப் பொதுச் செயலாளர் V.செந்தில்குமார் (VSK) அவர்களின் முன்னிலையில் மாற்று கழகத்திலிருந்து அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தில் உடன்பிறப்புகள் இணைந்தனர் அவர்களை கழக நிறுவனர் & பொதுச் செயலாளர் V. செந்தில் குமார் (VSK) அவர்கள் வரவேற்று கட்சி கொடிகள் மற்றும் உறுப்பினர் அட்டைகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக