தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மாண வர் செவிலியர் சங்கம் சார்பில் மாணவ, மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
கல்லூரி அலுவலக ஊழியர் ஜாய்சன் ஆரம்ப போட்டி ஜெபம் செய்தார். போட்டிகளை நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் நடத்தினர்.
இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு 100மீ, 400மீ ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து, எறிப்பந்து, ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் ஆசிரியர் கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம், திருமண்டல பெண்கள்கள் மேல்நிலைப்பள் ளிகளின் தாளாளர் ரமா, திருமண்டல நிர்வாக செயலாளர் கருணாகரன். கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி, மாணவர் செவிலியர் சங்க தலைவர் பேராசிரியர் ரூபன் காலிசன், உதவி பேராசிரியை ப்ரூலின் மெல்சியா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக