சட்ட விரோதமாக புகையிலைப் பொருட் களை கடத்தியவர் கைது ஏழு கிலோ புகையிலை பறிமுதல்!
வேலூர் , ஜுலை 25 -
வேலூர் மாவட்டம் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பவர், மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. மயில் வாகனன், இ.கா.ப,. அவர்கள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 24.07. 2025-ம் தேதி, வேலூர் காட்பாடி காவல் நிலைய எல்லை க்குட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டு எதிரி பார்த்தசாரதி , வ/43, த/பெ. ஜெயக்குமார், மேட்டுப்பாளையம் என்பவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த சுமார் 07 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்ப தை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக