மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோகாசனப் போட்டி
ஃபியூசர் இந்தியா ஸ்போர்ட்ஸ் அன்ட் கல்சுரல் டிவலப்மென்ட் சார்பாக மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான யோகாசனப் போட்டி உதகை அண்ணா அரங்கில் நடைபெற்றது. சுதிர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் ரமணா, பிசலு அமைப்பு சாலினி, நீலகிரி எஜீகேஷனல் டிரஸ்ட் ஜாபர், கூட்டமைப்பின் உதகை வட்ட பேரிடர் தன்னார்வலர் அஜய் ஆகியோர் கலந்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். புலவர் இர. நாகராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ரங்கம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ஃபியூசர் இந்தியா ஸ்போர்ட்ஸ் அன்ட் கல்சுரல் டிவலப்மென்ட் பவுன்டேஷன் செயலர் ரஞ்சித் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக