இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி புதிதாக கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அவசர சிகிச்சைக்கு செல்லும் வழியில் தரைத்தளம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யாமல் உள்ளது.இதனால் நோயாளிகள் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சம் ஏற்படுத்துகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதியில் இருந்துஇங்கு வரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை 108 ஆம்லென்ஸ் மூலமாக கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. 108 வாகனத்தை நிறுத்தும் இடம் சேதமடைந்து நோயாளிகளை டிச்சர் மூலமாக கொண்டு செல்ல முடியாமல் உள்ளது அவசர உதவி வாகனம் நிறுத்தி நோயாளிகளை இறக்கி கொண்டு செல்லக்கூடிய இடம் டைல்ஸ் உடைந்து பள்ளமாக உள்ளது இதனை (மராமத்து) சரி செய்யவேண்டும் என இங்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் கோருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக