மாவட்டத்தின் முதலிடம் பிடித்த சிவசைலம் சாம்ராஜ் பள்ளி மாணவர்
நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள HADP மைதானத்தில் இன்று பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. கோத்தகண்டி பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் சிவசைலம் சாம்ராஜ் பள்ளியில் பயின்று வருகிறார் இவர் இன்று நடந்த மூன்று ஆயிரம் மீட்டர் 19 வயதிற்கு உட்பட்டோர் ஓட்டப்பந்தய போட்டியில் தனி பிரிவில் பங்கேற்று மாவட்டத்தின் முதலிடத்தை பிடித்தார். இவருக்கு பள்ளியின் தலைமை ஆசிரியரும் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக