இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் சித்திரங்குடியில் காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கும், பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளிக்கும் இடையே கடந்த 14ந்தேதி ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு தங்கவேலு இராமநாதபுரம் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தனி பிரிவு காவலர் லிங்கசாமி பரமக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற நிலையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 25 ஆம் தேதி தனிப்பிரிவு காவலர் லிங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக