மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்!!!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்டம் மேலாளராக ஸ்ரீ பன்னாலால் அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார் .அப்போது ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கை மனு அளித்தனர் .அவர்கள் அளித்த மனுவில் மேட்டுப்பாளையம் -கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும்.கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி தூத்துக்குடி சேவையை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் .திட்டத்தை சரியாக செயல்படுத்த வேண்டும். ரயில் நிலையத்தில் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.இந்த ஆய்வின்போது ரயில்வே துறை அலுவலர்கள், பொறியாளர்கள், மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ,மற்றும் ரயில்வே காவல்துறையினர் ,உடன் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக