பண்ணைக்காடு பிரிவில் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பண்ணைக்காடு பிரிவில் பண்ணைக்காடு பகுதிக்கு முறையான பேருந்து வசதி இல்லை என்று கூறி ஜூலை 3 இன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்,
மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார், போக்குவரத்து துறையினர், காவல்துறையினர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சரியான முறையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது, இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக