வேலூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஜூலை, 2025

வேலூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை!

வேலூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொது ஏலம் மூலம் விற்பனை!

வேலூர் , ஜுலை 29 -

வேலூர் மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 07 இரண்டு மற்றும் 07 நான்கு சக்கர வாகனங்கள் என மொத் தமாக 14 வாகனங்கள் (Scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளதால் மாவ ட்ட காவல் கண்காணிப்பாளர் A.மயில் வாகனன், உத்தரவின்படி வரும் 07.08.2025-ம் தேதி காலை 09.00 மணி முதல், வேலூர் மாவட்டம் நேதாஜி ஸ்டேடியம், ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடு வோர் ரூ.100/-ஐ நுழைவு கட்டணமாக செலுத்திய பின்னரே வாகனங்களை ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலம் எடுக்கப்பட்ட இரண்டு சக்கர வாகனத் திற்கு ஏலத்தொகையுடன் கூடுதலாக 12% வரியும் (GST), நான்கு சக்கர வாகனங் களுக்கு ஏலத்தொகையுடன் கூடுதலாக 18% வரியும் (GST) சேர்த்து செலுத்தப்பட வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத் திற்கு இரசீது வழங்கப்படும். அந்த இரசீ தே வாகனத்திற்குண்டான உரிமை ஆவணம் ஆகும். மேலும் விபரங்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் மோட்டார் வாக னப்பிரிவு, ஆயுதப்படை, வேலூர் அவர்க ளை நேரடியாக சென்று அலுவலகத்தி லோ அல்லது 9498148207 என்ற தொலை பேசி எண் மூலமாகவோ தொடர்பு கொ ண்டு விபரங்களை தெரிந்துகொள்ள லாம் என்பதை வேலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad