வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!
வேலூர் , ஜுலை 30 -
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.மயில்வாகனன், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு நாள், இன்று 30.07.2025-ம் தேதி நடைப்பெற்றது. இந்த குறைதீர்வு நாளில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில்அளித்தனர் மேலும் வாரத்தில் அனைத்து வேலைநாட் களிலும் பொதுமக்களின் மனுக்களை நேரில் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களின்பிரச்சனை கள் தீர்க்கப்பட்டு வருகின்றது. இன்று 30.07.2025-ம் தேதி நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்வு நாளில் 47 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொண்டார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக